Thursday, January 29, 2009

முதலாளித்துவம் கொல்லும் ! கம்யூனிசமே வெல்லும் ! முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மா நாடு

முதலாளித்துவம் கொல்லும் ! கம்யூனிசமே வெல்லும் !

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மா நாடு

ஜனவரி 25 2009 அம்பத்தூர் , சென்னை

புதிய ஜன நாயக தொழிலாளர் முன்னனி


வேலை நேரத்திற்கு வரம்பில்லை ...
குறைந்த பட்ச ஊதியமில்லை...
தொழிற்சங்க உரிமையுமில்லை...
உரிமைகளை ஒழிக்கும் உலகமயம் !

தோழர் சி.பாலன்

வழக்கறினர், கர்னாடக உயர் நீதி மன்றம்


உழைப்பு தான் மூலதனம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். உழைப்பின் பலன் உழைப்பாளியிடம் சேர வேண்டும் என்பது உழைப்பாளியின் உரிமை, இது யாரோ வழங்கும் நீதியும் அல்ல ! தானமும் அல்ல !

தொழிலாளி தொழிற் சங்கமாக அணி திரன்டு நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின் தொழிலாளியின் உரிமைகள் சில சட்டமாக்கப்பட்டன. வரையறுக்கப் பட்ட்ன , அவை:

1. தொழிற் சங்க சட்டம்
2. தொழிற் தகராறு சட்டம்
3. தொழிற் சாலை சட்டம்
4. ஊதிய சட்டம்
5. பணிக்கொடை சட்டம்
6. தொழிலாளர் வைப்பு நிதி சட்டம்
மற்றும் சில தொழிலாளர் நல சட்டங்கள் மெலும் இந்திய அரசியல் சாசன சட்டம் சரத்து - 39ன் படி

அ) வாழ்வதற்கு போதிய வசதிகள்
ஆ) வளங்களை, உற்பத்தியை பகிர்ந்து அளித்தல்
இ) சம வேலைக்கும் சம ஊதியம்
ஈ) சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு

சரத்து 43ன் படிவழங்கப் பட்ட உரிமை என்னவென்றால் வாழ்வத்ற்கு ஊதியம் மற்றும் சூழல்:

வாழவதற்கான ஊதியம் என்றால் -
அடிப்படை சம்பளம், பஞ்சப்படி , வீடு வாடகைப் படி, கல்விப் படி, போக்குவரத்து படி, ஷிப்ட் படி, மருத்துவ படி, வாஷிங் அலவன்சு, போனசு , சம்பளத்துடன் விடுமுறை, உணவுப்படி, வார விடுமுறை படி மற்றும் பல.

வாழ்வதற்கான ஊதிய சமூக மற்றும் சட்ட பாதுகாப்ப்பு ஒவ்வொரு தொழிலாளிக்கும் அளிக்க வேண்டும் என்று நமது அரசியல் சாசன சட்டம் கூறுகிறது

வாழ்வதற்கு ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பு :

தொழிலாளர்கள் போராடிப் பெற்ற சட்ட பாதுகப்பு உற்பத்தியில் ஈடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப் படவில்லை. 1980ம் ஆண்டு 20% தொழிலாளர்கள் சட்ட மற்றும் சமூக பாதுகாப்புடன் பனி புரிந்தார்கள் . 2009ம் ஆண்டு 3% தொழிலாளர்கள் தான் சமுக பாதுகப்புடன் பனிபுரிகிறர்கள் .
1980 - 20% 1990 - 10%
2000 - 7% 2005 - 5%
2009 - 3%

குறைந்த பட்ச ஊதியம் சட்ட பாதுகாப்பு இல்லாமல் சுரண்டப்படும் தொழிலாளர்கள்
1991 - 29 கோடி - 90 %
2000 - 37.5 கோடி - 92.95%
2005 - 43,30 கோடி - 94.34 %


2005 ம் ஆண்டு இந்தியவில் மொத்த உழைப்பாளர்களின் எண்ணிக்கை. 45.97 கோடி. வாழ்வதற்கு ஊதியம் மற்றும் சட்டப் பாதுகாப்புடன் உழைக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2.67 கோடி. குறைந்த பட்ச ஊதியம், சட்ட மற்றும் சமூக பாதுகாப்பு இல்லாமல் சுரண்டப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 43.30 ஓடி. இந்த எண்ணிக்கை 1991 ம் ஆன்டு 29 கோடியாக இருந்தது. 2005 ம் ஆண்டு 43.30 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெர்மனி, ஜப்பான் , அமெரிக்கா போன்ற நாடுகளில் தொழிலாளர்களின் ஊதியம்

ஜெர்மனியில் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளிக்கு ஒரு மணி நேர உழைப்புக்கு கொடுக்கப்படும் ஊதியம் 32 டாலர். அதாவது ரூ.1600 /- ஒரு நாள் ஊதியம் 12 8000. ஒரு மாத ஊதியம் ரூ 3,84,000/-
ஜப்பானில் ஒரு மணி நேர உழைப்புக்கு $ 24 டாலர். அதாவது ரூ.1200 /- ஒரு நாள் ஊதியம் ரூ.9600 /- மாத ஊதியம் 2,88,000 /-
அமெரிக்காவில் ஒரு மணி நேர உழைப்புக்கு 17 டாலர். அதாவது ரு.850 ஒரு நாள் ஊதியம் ரூ.6900. ஒரு மாத ஊதியம் ரூ.2,07,0000.
இந்தியாவில் உற்பத்தியில் ஈடுபடும் நிரந்தர தொழிலாளியின் ஊதியம் ரூ.8000- இதே தொழிலில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளியின் மாத ஊதியம் ரூ.2000.

ஆகவே ஒரு ஜெர்மனி தொழிலாளியின் ஊதியத்தை 192 இந்திய தொழிலாளிக்கு வழங்கப் படுகிறது. அதாவது 191 இந்திய தொழிலாளியின் உழைப்பு முழுவதும் லாபமாக மாறி மூலதனமாக மாற்றப்படுகிறது.


அமைப்பு சாரா தொழிலளர்கள் :

43.30 கோடி தொழிலாளர்கள் அமைப்பு சாரா தொழிலளர்களாக பணி புரிகிறார்கள். இது இரன்டு வகைப்படும்.
1. அமைப்பு சார்ந்த துறையில் பணி புரியும் அமைப்பு சாரா தொழிலாளர்கள்:
, தேசிய மற்றும் மா நில பொதுத்துறையில் பணி புரியும் ஒப்பந்த மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள். மத்திய மற்றும் மா நில அரசுத்துறையில் பணி புரியும் ஒப்பந்த மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள்.
இவர்கள் பொதுத்துறை நிறுவனங்களில் மற்றும் அரசுத்துறைகளில் உழைத்த போதிலும் இவர்களை ஒப்பந்த தொழிலாளர்கள் மூலமாக பணியில் அமர்த்தப் படுகிறார்கள் . இவர்கள் நிரந்தர பணியாளர்கள் போல பணி புரிந்த போதிலும் மோசடியாக ஒப்பந்த தொழிலாளர்கள் என பட்டம் சூட்டப் பட்டுள்ளனர்.

ஊதியம் :

நிரந்தர தொழிலாளிக்கு வழங்கும் ஊதியத்தில் நான்கில் ஒரு பங்கு தான் ஒப்பந்த தொழிலாளிக்கு ஊதியமாக வழங்கப் படுகிறது.
நிரந்தர தொழிலாளிக்கு மாதம் ரூரூ 12000 என்றால் அதே வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளிக்கு ரூ. 3000 கொடுத்து சுரண்டுகிறார்கள் .
பொதுத்துறை நிறுவனங்களான நெய்வேலி அனல் மின் நிலையத்திற்கு ரூ 120 பி.எச்.எல் ரு125 /-பி.இ.எம்.எல் ரூ 112. போக்குவரத்து தொழிலில் ஈடுபடும் தொழிலாளிக்கு தினம் ரூ 60 ரூ 80 என வழங்கப் படுகிறது. சுகாதாரத் துறையில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளிக்கு ரூ. 63 வழங்கப் படுகிறது.

பன்னாட்டு கம்பெனிகள் தொழிலாளர்களை ஒப்பந்த முறையில் பணியில் அமர்த்தி குறைந்த கூலி கொடுத்து சுரண்டுகிறர்கள். கோகோ கோலா கம்பெனியில் தினக்க் கூலி ரூ 50.
போயர் அன்ட் கலர்செம் என்ற ஜெர்மானிய கம்பெணியில் நிரந்தர தொழிலாளர்களை கட்டாய பணி நீக்கம் செய்து ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்தி தினக்கூலியாக ரூ 80 வழங்குகிறர்கள்.

தனியார் கம்பெனிகள் அனைத்தும்
தன்னுடைய நிரந்தர தொழிலாளர்களை கட்டாய பணி நீக்கம் செய்து தொழிலாளர்களை ஒப்பந்த முறையில் அமர்த்தி குறைந்த கூலி கொடுத்து உழைப்பை சுரண்டுகிறார்கள்.

2. அமைப்பு சாரா தொழிலில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் :

புலம் பெயரும் தொழிலாளர்கள் : அனைத்து மா நிலங்களிலிருந்தும் ஏழைக்கூலி தொழிலாளர்கள் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி வகுப்பை சேர்ந்தவர்கள் தாங்கள் பிறந்த இடத்தில் வாழ வழியில்லாமல் பிழைப்பை தேடி புலம் பெயருகிறார்கள். குறிப்பாக பிகார், ஒரிசா, உத்திர பிரதேசம், ஆந்திர மா நிலங்களிலிருந்து சென்னைக்கு, மதுரை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்கு கூலி வேலை செய்ய வருகிறார்கள். இதே போல் தமிழகத்திலிருந்தும் புலம்பெயர்ந்து பெங்களூர், மும்பை, கேரளா போன்ற இடங்களுக்கு புலம் பெயர்ந்து போகிறார்கள்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை கட்டுமானப் பணியிலும் கல்லுடைக்கும் பணியிலும் செங்கல் சூளையிலும், இரும்பு உருக்கும் தொழிலிலும், சுமை தூக்கும் தொழிலிலும் ஒப்பந்த தாரர்கள் மூலமாக பணியில் அமர்த்தி கசக்கி பிழியப் படுகின்றனர்.

கட்டுமான தொழிலும் புலம் பெயர்ந்த கான்ட்ராக்ட் தொழிலும்

பலமாடிக் கட்டிடங்களை கட்டும் பெரிய கட்டட நிறுவனங்கள் உள்ளூர் தொழிலாளர்களை தவிர்த்து புலம் பெயர்ந்த கட்டட தொழிலாளர்களை பணியில் அமர்த்திக் கொள்கிறார்கள். கட்ட்மான பணி நடைபெறும் இடங்களில் தகர கொட்டகையில் தங்க வைக்கப் படுகின்றார்கள். இங்கு இவர்களுக்கு சுத்தமான குடி நீர், சுகாதார வசதிகள் கழிப்பிடம் எதுவும் இல்லை. மருத்துவ வசதியும் இல்லை. பிள்ளைகள் படிக்க கல்வி வசதி இல்லை. இவர்கள் தினமும் 12 முதல் 14 மணி நேரம் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு தினம் ரூ.80 கூலி கொடுத்து இவர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள். இவர்களுக்கு சங்கம் வைக்கும் உரிமை இல்லை. தொழிலாளர் நல சட்டத்தின் படி எந்த சலுகைகளும் கிடையாது. இவர்கள் பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு இல்லாததால் விபத்தில் ஆடு மாடுகளைப் போல செத்து மடிகிறார்கள். ஊனமுற்றோருக்கு மருத்துவ வசதி இல்லை.


கல்லுடைக்கும் தொழிலாளர்கள்
தேசிய சொத்துக்களாகிய மலைகள், பாறைகள், கற்குவாரிகள் அனைத்தும் மாபியா பிடியில் உள்ளது. கல்லுடைக்கும் தொழிலாளர்களை கான்ட்ராக்ட் முறையில் பணியில் அமர்த்திக் கொத்தடிமைகள் போன்று நடத்தப் படுகிறார்கள். எந்த பாதுகாப்பு சாதனங்களும் இல்லாமல் வெறும் கையில் சுத்தியை பிடித்து கல்லுடைக்கிறார்கள். இவர்கள் ரத்தம் சிந்தாத நாட்களே கிடையாது.

இவர்களை பர்க்கின்சன், சிலிகோசிசு, நியோமோகோனிசாச் போன்ற நோய்கள் தாக்கப் பட்டு 45, 50 வயதுகளில் ரத்தம் கக்குகிறார்கள். இவர்களுக்கு எந்த வசதியும் இல்லாமல் மலைகள், பாறைகள் , கற்கள் மத்தியில் குடிசைகளில் வாழ்கிறார்கள். தினம் 10 முதல் 16 மணி வரையில் உழைக்கிறார்கள். இவர்கள் 40 முதல் 60 வரை கூலி பெற்று வறுமையில் வாடி மடிகிறார்கள். சமூக பாதுகாப்பு, சமூக நீதி, சட்ட பாதுகாப்பு எதுவுமே இவர்களுக்கு கிடையாது.


நகர சுத்தி தொழிலாளர்கள்
நகரங்களை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் இல்லை. இவர்கள் கான்ட்ராக்ட் முறையில் பணியில் அமர்த்தப் படுகிறார்கள். இவர்களின் ஊதியம் கான்ட்ராக்ட் காரர்களால் திருடப் படிகிறது. தினக்கூலியாக இவர்களுக்கு ரூ.63 வழங்கப் படுகிறது. வேறு எந்த சலுகைகளும் கிடையாது.

மருத்துவமனை தொழிலாளர்கள்

டாக்டர்கள் , நர்சுகள் தவிர்த்து மற்ற எல்லா தொழிலாளர்களும் கான்ட்ராக்ட் முறையில் பணியில் அமர்த்தப் பட்டு சுரண்டுகிறார்கள். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.60- ரூ.125 வழங்கப் படுகிறது. சங்கம் வைக்கும் உரிமை இல்லை. பணி நிரந்தரம் இல்லை.

சுமைதூக்கும் தொழிலாளர்கள் மருத்துவமனை தொழிலாளர்கள் செக்யூரிடி தொழிலாளர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஆடை தயாரிப்பு தொழிலாளர்கள், வீடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வொர்க் ஷாப்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் விவசாய கூலிகள், ஆடு மாடு வளர்ப்பவர்கள், சமையல் செய்யும் தொழிலாளர்கள், சிகை திருத்துனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கடைகளைல் வேலை செய்யும் தொழிலாளர்கள், துணி கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், இவர்கள் அனைவருக்கும் சமூக பாதுகாப்போ சட்ட பாதுகாப்போ கிடையாது.இவர்களுக்கு தினம் ரூ.40 முதல் ரூ.80 கொடுத்து 10 மணி முதல் 16 மணி வரை வேலை வாங்கப் படுகிறார்கள். இவர்களுக்கு சங்கம் வைக்கும் உரிமை இல்லை.

ஏன் இந்த நிலைமை?

நமது நாட்டில் அரசு என்பது மூலதனத்தின் கைகூலிகளாகவும் தொழிலாலியின் விரோதியாகவும் சயல் பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

உலகமயமாக்கல் சூழலில் ஏகாதிபத்தியம் தொழிலாளர்களின் மீது ஒரு போரை திணித்துள்ளது. நமது நாட்டில் 1991 ம் ஆண்டு சிகப்பு கம்பளம் விரித்து ஏகாதிபத்திய அன்னிய கம்பெனிகளை வரவழைத்தது.
இதன் விளைவாக 1.அரசின் அதிகாரங்கள் அனைத்தும் ஏகாதிபத்திய ஆதரவு அதிகாரிகளிடமும் அரசியல் வாதிகளிடமும் ஒப்படைக்கப்பட்டது. 2. கனிம வளங்களும் பொது துறை நிறுவனங்களும் அன்னியருக்கு மலிவான விலைக்கு விற்றாகி விட்டது. 3. தொழிலாளர் சட்டங்களை முடக்கி தொழிலாளர்களை கசக்கி பிழிய அனுமதி அளித்து விட்டது.

தொழிலாளர் உரிமைகள் :
1. பணி நிரந்தரம்
2. சம வேலைக்கு சம ஊதியம்
3. சமூக பாதுகாப்பு சமூக நீதி சட்ட பாதுகாப்பு

தொழிலாளர் உரிமைகளை அடையும் வழிமுறை - பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்றம்:

சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆன பின்பும் கான்ட்ராக்ட் தொழிலாளர்களை அமைப்பு சாரா தொழிலாளர்களை பாதுகாக்க எந்த சட்டமும் பாராளுமன்றத்தில் சட்டமன்றத்தில் இயற்றப்படவில்லை.எந்த விவாதமும் நடைபெறவில்லை.ஒப்பந்த தொழிலாளர் முறை (ஒழிப்பு ம்ற்றும் முறைபடுத்துதல்) சட்டம் போன்ற சட்டத்திற்க்கு பற்கள் இல்லை.இதனால் எந்த உபயோகமும் தொழிலாளர்களுக்கு இல்லை.எனவே பாராளுமன்றம்,சட்டமன்றத்தின் மூலம் நமது உரிமைகளை பெறவோ பாதுகாக்கவோ முடியாது.
நீதிமன்றம்:

உச்ச நீதிமன்றம் 2001-ம் ஆண்டு கோல் இந்தியா தீர்ப்பில், கான்ட்ராக்ட் தொழிலாளர்களை நிரந்தர வேலையில் அமர்த்தலாம். நிரந்தர வேலை கேட்கும் உரிமை கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு இல்லை என தீர்ப்பு வழங்கி விட்டது.என்வே நீதிமன்றத்தின் மூலம் கான்ட்ராக்ட் தொழிலாளர்களின் உரிமைகளை பெறவோ,பாதுகாக்கவோ முடியாது.

நிர்வாகம்:

தொழிலாளர்கள் நல துறையில் அதிகாரிகள் எங்களுக்கு அதிகாரம் இல்லை.சட்டமும் இல்லை எனக் கூறுகிறார்கள்.எனவெ இதன் மூலமும் நாம் தீர்வூ பெற முடியாது.

தீர்வூதான் என்ன?:
தொழிலாளர்கள் உரிமைகளுக்காக பெரும்திரளாக அணிதிரள்வது,ஆலை உற்பத்தியை முடக்குவது,ஆலைவாயிலை முற்றுகையிடுவது தெருவில் சண்டை போடுவது,அடித்தால் அடிப்பது, நிர்வாக அதிகாரிகள் மீது
மலத்தை கொட்டுவது என்று போராட்ட களத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வூ காண வேண்டும்.
அத்தகைய தீர்வூகள் நிலைப்பெறுவதற்கு தொழிலாளர்களை அரசியல் படுத்தி அதிகாரத்தை பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் மாற்றுவதுதான் நிரந்தர தீர்வாக அமையும்.

வெளியீடு :

மனித உரிமை பாதுகாப்பு மையம் - தமிழ்நாடு

702/5 ஜங்சன் ரோடு, பி,ஜே மேன்சன்,
விருத்தாச்சலம் - 606001, கடலூர் மாவட்டம்
கைபேசி: 9443260164, 9884444494